ஆம்புர் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா காலமனார்

ஆம்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா (52) உடல்நலக்குறைவால் செவ்வாய்கிழமை அதிகாலை காலமானார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர், ஆம்பூர் தொகுதியில், 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று ஆம்பூர்
சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.