ஐந்து சிறுமிகளுக்கு தலைமை ஆசிரியரால் நேர்ந்த கொடூரம் !!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த பள்ளியில் பயிலும் 7 முதல் 11 வயதுள்ள ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த குற்றங்களுக்காக காவல்துறையினர் ஐபிசி 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடிவருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையின்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி, தன் பெற்றோரிடம் தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளைப் பற்றிக் கூறியுள்ளார். 40 வயதான அந்த தலைமை ஆசிரியர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த குற்றச்செயலைச் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த சிறுமிகளை வலுக்கட்டாயமாக ஆபாசப் படங்களைப் பார்க்க வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து யாரிடமும் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளார்” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சிறுமி பாதிக்கப்பட்டது தொடர்பான விசாரணையின் போதுதான், வேறு சில சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த அந்த தலைமை ஆசிரியர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைக் காவல்துறையினர் தேடிவருகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) சேர்ந்த அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மற்ற சிறுமிகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணையை மேற்கொள்ள இருக்கின்றனர்.

தினமும் தலைமை ஆசிரியரே சிறுமிகளின் வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்வார் என்றும், அப்போது, எனது பெண் பள்ளிக்குச் செல்ல விரும்ப மாட்டார் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், “இதுகுறித்து பலமுறை சிறுமிகளிடம் கேட்டபோதும் அவள் எதுவும் சொல்லவில்லை. இப்படி ஒரு கோணத்தில் நாங்கள் யாரும் யோசிக்கவே இல்லை” என்றும் சிறுமிகளின் தாயார் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பலமுறை கேட்ட பிறகே சொன்னதாகவும், அந்த தலைமை ஆசிரியர் சிறுமிகளைக் கத்தியைக் காட்டி `இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது’ என்றும் மிரட்டியதாகவும் சிறுமியின் தாயார் கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அந்த தலைமை ஆசிரியரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்ட பிறகு தான் முழு விவரமும் தெரியவரும். தலைமறைவான அவரை தேடிவருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x