“காங்கிரசும், பிஜேபியும் ஒருபோதும் ஒன்று சேராது” கார்த்தி சிதம்பரம் உறுதி!!

“காங்கிரசும், பிஜேபியும் 180 டிகிரி வித்தியாசமான அரசியல் கட்சிகள். அதனால் அவை ஒருபோதும் ஒன்று சேராது” என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழசேவல்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். “தமிழகத்தின் முதன்மையான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். மேலும் சூரப்பா துணை வேந்தராக நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு” என கூறினார்.
மேலும் “12 வருடத்திற்கு பிறகு அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அதிக அளவில் மருத்துவ இடம் கிடைத்ததை மிகவும் வரவேற்கிறேன். காங்கிரசும், பிஜேபியும் 180 டிகிரி வித்தியாசமான அரசியல் கட்சிகள். அதனால் அவை ஒருபோதும் ஒன்று சேராது” என கார்த்தி சிதம்பரம் கூறினார்.