கொடைக்கானலுக்கு ஜாலி டூர்… நாளை முதல் செல்லலாம்
சுற்றுலா பயணிகளையே அதிகம் நம்பி உள்ள ஊர் கொடைக்கானல். ஊரடங்கினால் வெளி மாவட்ட பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் நாளை முதல் சுற்றுலாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்ட அறிவிப்பில், முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகிறது.
நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர்.வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம் என்றார்.