“அணியில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவது நல்லதல்ல” – எம்.எஸ்.தோனி

சிஎஸ்கேவில் இருக்கும் இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் நேற்றையப் போட்டியில் கண்ட படுதோல்வியை அடுத்து , பிளே ஆஃப்-க்கான வாய்ப்பை சென்னை அணி ஏறக்குறைய இழந்துவிட்டது. இதனையடுத்து போட்டிக்கு பின்பு தோனி பேசினார்.

அப்போது “அணியில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவது நல்லதல்ல. அது வீரர்களிடையே ஒருவித பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும். அந்த உணர்வு வீரர்களின் அறையில் இருக்கக் கூடாது. உண்மையை சொல்வதென்றால் இந்தாண்டு எங்களுக்கு சரியானதாக அமையவில்லை”

மேலும் பேசிய தோனி “அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் களமிறக்கப்படுவார்கள். இனி வரும் போட்டிகளில் அவர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடலாம்”

இறுதியாக பேசிய அவர் “எல்லா நேரங்களில் நாம் நினைத்தது போல நடக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆட்டத்தின் முடிவை வைத்துதான் எங்கே தவறு நடக்கிறது என்பதை கண்டறிய முடியும். போட்டியின் முடிவுகளும் வீரர்களின் மனநிலையை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார் தோனி.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x