“அரசியலில் ஆன்மீகம் எடுபடாது; முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்” – கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும் ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பதாவது:

திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால் ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது.

தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும்; ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது. ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம். முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x