மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளி திருட்டு!!

உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை கல்புதிரை தர்க்கா பகுதியை சேர்ந்தவர் ரகீம்முனிஷா(54), மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் திருமணத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூருக்கு குடும்பத்துடன் சென்றார். திருமணம் முடிந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார்.

வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது, பின்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 20 சவரன் நகை, 600 கிராம் வெள்ளி நகை, பொருட்கள், ₹40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது.

ரகீம்முனிஷா வீடு 2 நாட்களாக பூட்டப்பட்டு கிடந்ததால் ஆட்கள் இல்லாததை கண்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து திறந்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் ரகீம்முனிஷா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம ஆசாமிகளையும் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x