கல்லூரி மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி, கற்பை சூறையாடும் கும்பல் கைது!!

டெல்லியில் கல்லூரிப் பெண்களுக்கு போதை பொருள் சப்ளை செய்யும் பெண் ஒருவர் போலிஸாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மஜ்னு கா தில்லா என்ற பகுதியில் ரூமா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் போதைப் பொருள் சப்ளை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர். இந்நிலையில் போதைப் பொருள் சப்ளை செய்வதற்காக தனது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வைத்துக் கொண்டு காத்திருந்ததார் ரூமா. அது எப்படியோ போலீசாருக்கு தெரிய வர, போதை மருந்து தடுப்பு போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அப்போது ரூமாவிடம் 116 பாலித்தீன் பைகளில் மொத்தம் 106 கிராம் எடையுள்ள அந்த போதை பொருள் 10 லட்சம் மதிப்புடையது. அதை ரூமாவிடமிருந்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர். ரூமாவிடம் விசாரணையை ஆரம்பித்த போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த போதை பொருளை விற்கின்ற கூட்டம் முதலில் கல்லூரி இளம் பெண்களை குறி வைக்கிறார்களாம். திடீரென போதைபொருள் கொடுப்பதை தவிர்த்து விடுகிறார்களாம். போதைக்கு அடிமையான பெண்கள் அந்த போதை பொருளாக்காக எதை செய்ய சொன்னாலும் தயாராகிறார்களாம். அந்த போதை பொருள் கும்பல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண்களின் கற்பையும் சூறையாடிகிறார்களாம். இவ்வாறு பெண்கள் போதைக்கு அடிமையாகி தனது கற்பையும் இழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணையில் ரூமா இதனை ஒப்புக் கொண்டுள்ளார். போலீசார் ரூமாவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர் என கூறப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x