தென்காசி அருகே 16 வயது சிறுமியை கற்பழித்து, கருக்கலைப்பு!! சிறுமியின் தாய் உட்பட 3 பேர் கைது..

தென்காசி அருகே 16 வயது சிறுமி கற்பழிப்பு செய்ததாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி அருகே உள்ள புளிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 26). ஆட்டோ டிரைவரான இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பேசி பழகி உள்ளார். மேலும், ஆசை வார்த்தை கூறி கடந்த மார்ச் மாதம் கட்டாயப்படுத்தி அந்த சிறுமியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் சுப்புராஜ் தெரிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதுகுறித்து அவள் தனது தாயிடம் கூறினாள். உடனே அவர் சுப்புராஜின் பெற்றோரான சுந்தர்ராஜ் (56), மாரியம்மாள் (49) ஆகியோரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள் கருவை கலைத்து விடு என்றும், ரூ.2 லட்சம் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழப்பாவூர் யூனியன் சமூகநலத்துறை அதிகாரி பாக்கியத்தாய் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்புராஜை கைது செய்தனர். மேலும், கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்ததாக சுந்தர்ராஜ், மாரியம்மாள் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான சுப்புராஜ் கடந்த மே மாதம் இன்னொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x