பார்லிமென்ட் மீது தாக்குதல் போலீஸ் அதிகாரி ராஜினாமா

அமெரிக்க பார்லிமென்ட் தலைமையகம் மீது டிரம்ப் ஆதரவு கும்பல் நடத்திய தாக்குதலின் தொடர்ச்சியாக, தலைமை போலீஸ் அதிகாரி, ராஜினாமா செய்துள்ளார். 

உலக நாடுகளுக்கு ஜனநாயகம் பற்றி அறிவுரை வழங்கும் அமெரிக்காவில், தேர்தல் முடிவை ஏற்காமல் டிரம்ப் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டது, பெரும் கேலிக்கூத்தாக கருதப்படுகிறது.

பார்லிமென்ட் வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் எம்.பி.,க்கள் இருந்தபோது, அங்கு புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். 

இதையடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலியாகினர். ரகளையில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து கூறி பலரும், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்று போலீசாரை குறை கூறினர். இதன் தொடர்ச்சி, தலைமை போலீஸ் அதிகாரி ஸ்டீவன் சுண்ட் ராஜினாமா செய்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x