தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம்!!!

திருவண்ணாமலை:

”தமிழகம் முழுவதும், பற்றாக்குறையுள்ள அரசு பள்ளிகளில், விரைவில் ஆசிரியர்கள், பணிநியமனம் செய்யப்படுவர்,” என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மூன்று மாணவியர், புரிசை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஒரு மாணவர் என நான்கு பேர், ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன், ஆகியோர் பங்கேற்றனர்.பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும், 120 கல்வி மாவட்டங்களில், அரசு மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

வரும், 30ல், தமிழக அளவில் வேதியியல் பாடப்பிரிவுக்கு, 500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அளவில் ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பள்ளிகளுக்கு, விரைவில், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x