84 வயது முதியவர் கற்பழித்தாரா? குழந்தைக்கு மரபணு சோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கொல்கத்தாவில், 84 வயது முதியவர் ஒருவர், 14 வயது சிறுமியை கற்பழித்ததாக கூறி சிறையில் உள்ளார். இவர், போஸ்கோ சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார்.

இவருக்கு ஆதரவாக, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் வாதிட்டதாவது‘குற்றம்சாட்டப்பட்டுள்ள 84 முதியவருக்கு வயதாகிவிட்டதால், அவரால் யாரையும் கற்பழிக்க முடியாது. அவருக்கு ஆண்மையில்லை. வாடகை தகராறில் என் தரப்பு மனுதாரர் மீது பெண் குடும்பத்தார் பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். அவர் எந்த மருத்துவ பரிசோதனைக்கு தயாராக உள்ளார். மே 12ஆம் தேதியிலிருந்து சிறையில் இருப்பதால், முதியவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு, உண்மையான தந்தை யார் என்பதை அறிய, மரபணு பரிசோதனை செய்ய வேண்டும்.’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த வாதத்தை மறுத்த அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, ‘முதியவர் தனது வயதை காரணம் காட்டி, குற்றத்திலிருந்து தப்பிக்க பார்க்கிறார். அந்த சிறுமிக்கு கடந்த ஜூன் 5ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. எனவே, நாங்கள் மரபணு பரிசோதனை செய்ய உள்ளோம். அதற்காக, ஏற்கனவே மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவிலேயே அந்த சோதனை முடிவுகள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மூன்று வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம், மரபணு பரிசோதனை முடிவை கோர்ட்டில் விரைவாக சமர்பிக்குமாறு உத்தரவிட்டது.

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x