பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

2019 -20 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழகதில் மொத்தம் 92.3 சதவீத மாணவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு, மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கு நாளை முதல் (ஜூலை 24) ஜூலை 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாக, ஆன்லைன் மூலமாக இவற்றுக்கான விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தனித்தேர்வர்களும் தங்களது தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு?: விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் மாணவர்கள் 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305ம், ஏனைய பாடங்களுக்கு தலா 205 ரூபாய் அளிக்க வேண்டும். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி்ப்படுவர்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதேபோன்று சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்களும் முகக்கவசமும், கையுறையும் அணிந்திருக்க வேண்டியது அவசியம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x