முகம்மது நபி கார்ட்டூன்; கார்ட்டூனிஸ்ட் வர்மா அதிரடி கைது!

முகம்மது நபி பற்றி கார்ட்டூன் வெளியிடுவேன் என்று சொன்ன கார்டூனிஸ்ட் வர்மா கைது செய்யப்பட்டுள்ளான்.
‘முகமது நபி கார்ட்டூன் அறிவிப்பு; தமிழகத்தில் வெடிக்கப்போகிறதா கலவரம்?’ என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதுதொடர்பாக, கார்ட்டூனிஸ்ட் வர்மாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதக்கலவரத்தை ஏற்படுத்த முயன்றது, பிரிவினை என்று பல்வேறு முக்கிய பிரிவுகளின் கீழ் அவன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த கார்ட்டூன் அறிவிப்புக்கு பின்னணியாக செயல்பட்ட மாரிதாஸ் உள்ளிட்டோர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கார்ட்டூனிஸ்ட் வர்மா கைதுக்கு, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனங்களை தெரிவித்துள்ளார்.