தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தைச் சேர்ந்த இருவர் தேர்வு

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்‍கு தேர்வு பெற்றவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வாகிவுள்ளனர். இந்த பட்டியலில், தமிழகத்தில் இருந்து சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x