காய்கறி விற்கும் கால்பந்து பயிற்சியாளர்!

கொரேனா வைரஸ் தொற்றால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால், பயிற்சியாளர் ஒருவர் காய்கறி விற்பனையாளராக மாறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொருளாதாரம் கடுமையாக முடங்கியுள்ளது. தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு பயிற்சிகள் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பையில் வசித்து வரும் கால்பந்து பயிற்சியாளரான போஸ்லே, வறுமையால் தவித்து வந்தார். வேறுவழியின்றி, காய்கறி விற்று, வயிற்றை நிரப்பி வருகிறார்.இதுகுறித்து பிரசாத் போஸ்லே கூறுகையில் ‘‘நான் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தேன். தற்போது வேலையுமில்லை, கையில் பணமுமில்லை. வேறுவழியின்றி காய்கறி விற்பனையில் இறங்கிவிட்டேன். இரண்டு மாதங்களாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன்’’ என்றார்.

கட்டாய ஊரடங்கால், பல நிறுவனங்கள் லட்சக்கணக்கான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x