ஐக்கிய அரபு எமிரேட்சில் இளைஞர்கள், நடுத்தர வயதினர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் கொரோனாவால் இதுவரை 66,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 58,300-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புகளை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுகாதாரதுறை தெரிவிக்கின்றது.
அரபு எமிரேட்சில் தொற்றால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 40 வயதுடையவர்கள் என அந்நாட்டின் சுகாதார துறையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அரசின்விதிமுறைகளை மீறுவது பாதிப்பு அதிகரிப்பதற்கான முக்கியமான காரணமாகும். முகக்கவசத்தை தவிர்ப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது போன்றவற்றால் கடந்த 2 நாட்களில் நோயின் பாதிப்பு உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
