“அடுத்து வரும் வைரஸ் தொற்று இப்போது உள்ளதை விட இன்னும் மோசமாக இருக்கும்!” WHO எச்சரிக்கை!

அடுத்து வரும் தொற்று நோய்க்கு உலகம் தயாராக இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கூறியுள்ளார்.
சீனாவில் டிசம்பர் 2019இல் கொரோனாத் தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உலகளவில் 2.7 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,88,326 பேர் இறந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொடங்கிய சீனாவில் நோய் கட்டுக்குள் வந்துவிட்டாலும் கூட மற்ற நாடுகளில் பாதிப்பு குறையவில்லை.
இந்தியா தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளன. இந்நிலையில் அடுத்த தொற்று இதைவிட வீரியமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரையிலான தொற்றின் தன்மை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த தொற்று கொரோனாவை விட அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் பேசுகையில், “வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கையில் இது கடைசி தொற்றுநோய் அல்ல. இதற்கு முந்தையத் தொற்றுகள் நமக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. அடுத்து வரும் தொற்று இன்னும் மோசமாக இருக்கும். எனவே உலகம் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மக்களின் ஆரோக்யம் பற்றி விசாரிக்க உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.