“நீட்டுக்கு இரங்கல் சொல்லும் நேரம் வந்துவிட்டது!” நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவி குறித்து தயாநிதிமாறன்!

நீட் தேர்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதே மாணவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா குறித்து பேசிய தயாநிதிமாறன், “நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். நகரத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு படித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பு படிக்க முடியாது. இதில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் உடந்தையாக இருக்கிறது.

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள கிராமத்தில் மருத்துவ கனவுகளுடன் யார் யார் இருக்கிறார்களோ அவர்கள் பயிற்சி பெற வேண்டும். கொரோனாவால் அனைத்தும் முடங்கியுள்ளது. ஆனால், மத்திய அரசு இதை செய்தே தீரவேண்டும் என்று குறிப்பாக தமிழ்நாட்டை பாதிக்கின்ற வகையிலே செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக அடிமை அரசு வெறும் இரங்கல் மட்டும் சொல்கிறார்கள். உயிர்களை இழந்தது போதும், அவர்களுக்கு இரங்கல் சொல்வதை விட நீட்டுக்கு இரங்கல் சொல்லும் நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x