மழை நீர் சூழ்ந்த வீடுகள்.. சாமர்த்தியமாக கேஸ் சிலிண்டர் சப்ளை செய்த ஊழியர்!!

சீர்காழியில் மழை நீர் சூழ்ந்த வீடுகளுக்கு ஊழியர் ஒருவர் நூதன முறையில் கேஸ் சிலிண்டர் எடுத்துச் சென்றுள்ளார். 

சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் புரெவி புயல் காரணமாக கடந்த புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து 5 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 20 சென்டி மீட்டர் மழை பதிவானது. இதனால் சீர்காழி பகுதியில் உள்ள தட்சிணாமூர்த்தி நகர், சின்ன தம்பி நகர், எஸ்.கே.ஆர் நகர், உக்கடையார் நகர், கோவிந்தராஜன் நகர்,  என்ஜிஓ நகர், பாப்பையா நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகர்ப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.

இதனால் குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்கள் மழை நீரைக் கடந்து அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வெளியே சென்று வர பெரும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சீர்காழி தட்சிணாமூர்த்தி நகரில் உள்ள குடியிருப்புகளை கடந்த 5 நாட்களாக மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனிடையே அப்பகுதியிலுள்ள ஒருவரது வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டதை அடுத்து சிலிண்டர் ஏஜென்சி ஊழியர் ஒருவர், வெள்ள நீரில் என்றும் பாராமல் நூதன முறையில் சிலிண்டரை கொண்டு சென்றார். இது அப்பகுதி மற்றும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x