கொரோனா நோயால் இறந்தவரின் உடலை சேதப்படுத்திய எலிகள்!! அதிர்ச்சியடைந்த உறவினர்கள்..

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் கொரோனா நோயால் இறந்தவரின் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 87 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் இறந்தவரின் உடலை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகம் எலிகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இறந்து நான்கு மணி நேரமே ஆகியிருந்ததால் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோபம் அடைந்த உறவினர்கள் ஸ்டெச்சரில் உடலை வைத்துக் கொண்டு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைந்து செல்லும்படி வற்புறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

“இறந்த நான்கு மணி நேரத்திற்குள் எலியால் எப்படி கடித்து முகம் உள்ளிட்ட பல பாகங்களை சிதைக்க முடியும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் இதற்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே, உடலை பெற்றுக் கொள்வோம்’’ என இறந்தவரின் மருமகள் தெரிவித்தார். இறந்தவரின் மகன் ‘‘கண்கள், முகம், காது, கால்கள் ஆகிய இடங்களில் எலிகள் கடித்துள்ளன. மருத்துவமனை ஸ்டாஃப்கள் பதில் அளிக்க மறுக்கின்றனர்’’ என குற்றம்சாட்டினார்.

அதன்பின், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x