பறக்கும் விமானத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்.. பதை பதைக்க வைக்கும் திக் திக் நிமிடங்கள்….!

பறக்கும் விமானத்தின் கழிப்பறையில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறு நிபுணராக தனது வாழ்க்கையின் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில், மருத்துவமனைகள் மற்றும் தொழிலாளர் அறைகளில் பல பிரசவங்களை பார்த்தவர் டாக்டர். வி.சைலஜா அவர்கள். புதன்கிழமை மாலை டெல்லியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பும்போது, விமானத்தில் அவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமாக பிரசவத்தை நடத்தியுள்ளார். இச்சம்பவத்தை அவர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக கருதும் அவர், தாயும், சேயும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்துள்ளார்.

டெல்லி-பெங்களூரு இண்டிகோ 6இ 122 விமானத்தின் நடுப்பகுதியில் முப்பதாவது வார கருவை சுமந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணான மோனிகா என்பவர் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள் வலியை உணர்ந்த அவர் விமானத்தின் கேபின் குழுவினரிடம் தகவல் அளித்தார். உடனடியாக விமானத்தில் இருந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.நாகராஜ் அவர்கள், அந்த கர்ப்பிணியை சோதனை செய்து கொண்டிருந்தார்.

இருப்பினும், வலி ​​அதிகரித்தவுடன், மோனிகா பதற்றமடைந்து கழிப்பறையை நோக்கி நடந்தாள். அப்போது தான், அங்கிருந்த டாக்டர்.சைலஜா, அந்த பெண்ணிடம் இருந்து வரும் இரத்தப்போக்கை கவனித்த உடனே கேபின் குழுவினரை எச்சரிக்கை செய்து அவரும் கழிப்பறையை நோக்கி விரைந்தார்.

மோனிகா தான் சுமார் ஒன்றரை மாத கர்ப்பிணி தான் என்று சொன்னதும், டாக்டர். சைலாஜா இல்லை இது அதிகம் என்று எனக்கு தெரியும், இது குறைந்தது 32 வாரங்களாக இருக்கக்கூடும் என்றார். மேலும், அப்போதே மோனிகாவின் பிரசவத்தை டாக்டர். சைலஜா பார்க்க தொடங்கினார்.

இதுகுறித்த பேசிய சைலஜா, “அவள் பிரசவிக்கப் போகிறாள் என்று எனக்குத் தெரியும். உடனே நான் என்னை தூய்மைப்படுத்திக் கொண்டு, கையுறைகள், பிபிஇ கிட் அணிந்து எனது பணியை தொடங்கினேன். மோனிகா கழிப்பறையின் இருக்கையில் அமர்ந்து அவளது வயிற்றில் அழுத்த தொடங்கினாள். பின்பு, நானும் அவளது அடிவயிற்றை அழுத்த சிறிது நேரத்திற்குள் தலை வெளியே வந்து குழந்தை பிரசவிக்கப்பட்டது. பருவத்திற்கு முந்தைய நிலையில் அதாவது குறை பிரசவத்தில் பிறந்த அந்த ஆண் குழந்தை, சுமார் 1.82 கிலோ எடையுள்ளது” என்று தகவல் அளித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “தாயும் குழந்தையும் நன்றாகச் செயல்பட்டு வந்தனர். குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் தாய்க்கும், குழந்தைக்கும் கூடுதல் கவனிப்பு தேவைப்பட்டது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நான் உறுதிசெய்தேன். இது தாயின் கருப்பை சுருங்க உதவியது. தாயும் குழந்தையும் நன்றாக இருந்தனர். விமானி என்னிடம் ஹைதராபாத்தில் விமானத்தை தரையிறக்கம் செய்யட்டுமா என்று கேட்டார். ஆனால் இருவரும் நலமுடன் இயங்கியதை உறுதி செய்த நான், அதற்கு அவசியமில்லை, பெங்களூரை அடையும் வரை குழந்தையும் தாயும் நன்றாக இருப்பார்கள் என்று நான் விமானியிடம் நம்பிக்கை தெரிவித்தேன்.

விமானத்தில் இருந்ததை கொண்டு என்னால் முடிந்ததைச் செய்தேன். தொப்புள் கொடியை வெட்டிய பிறகு நான் நெய்யை பயன்படுத்தினேன். விமான பணிப்பெண்கள், மருத்துவர் நாகராஜ் மற்றும் பயணிகள் என பலரும் எங்களுக்கு உதவினார்கள்.மோனிகா மன உறுதியுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார். அவர் ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையை பிரசவித்ததாக உற்சாகமாக இருந்தார். கையுறைகள், முகக் கவசங்கள் தாராளமாக கிடைத்தன. அதற்கு கொரோனாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.

இதையடுத்து விமானம் பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக தாயும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோனிகாவின் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய இண்டிகோ சிறப்பு சலுகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x