மணல் கொள்ளையால் தடையுறும் அகழாய்வு பணிகள்.. கலெக்டர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சிவகங்கை கலெக்டர் கீழடி அகழாய்வு பகுதிகளில் ஆய்வு செய்து புகைப்படத்துடன் கூடிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட மற்றும் அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அகரத்தில் கண்டறியப்பட்ட உறைகிணறு இதுவரை 21 அடுக்குகள் வரை உள்ளது. இதுமேலும் கூடுதலாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கீழடியில் ஆமை வடிவ அச்சு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உள்ளங்கைக்குள் அடங்கும் வகையில் சிறிய கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த அச்சின் மேற்புறம் மூன்று சிறிய கோடுகள் உள்ளன. இந்த உருவம் ஆமையை குறிப்பதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.மேலும் பெண் முகம் கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பெண் முகம் கொண்ட அச்சில் பெண்கள் காதணிகள் கொண்டவர்களாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே சிவகங்கை மாவட்டம், மணலூரை சேர்ந்த மகேஷ் ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் மனுவை தாக்கல் செய்துள்ளார். “விவசாய நிலங்களில் சவடு மண் அள்ளுவதாக கூறி அதிக ஆழத்திற்கு மணல் அள்ளுகின்றனர். குடிமராமத்து பணிகள் என்ற பெயரிலும் மணல் கொள்ளை நடக்கிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி, தொல்லியல் அகழாய்வு பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் மணல் அள்ளக் கூடாது என்றும், யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், சிவகங்கை கலெக்டர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து புகைப்படத்துடன் கூடிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை அக்.13க்கு தள்ளி வைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x