“இத எதுக்கு இவ்ளோ நாள் உருட்டணும்?” பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து சாமானியர்களின் பார்வை!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை குறித்து பொதுமக்கள் பலரும் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பில் சதித்திட்டம் தீட்டி, ஆயிரக்கணக்கானவர்களைத் தூண்டி விட்டதாகவும், வன்முறையை ஏற்படுத்தியதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த லக்னோ நீதிமன்றம் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் விடுதலை செய்யப்படுகின்றனர் என தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் 32 பேரும் விடுதலை ஆகின்றனர். எனினும் சிபிஐ தரப்பு உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இரண்டு வழக்குகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. அதில், ஒன்று நிலம் யாருக்கு சொந்தமானது? மற்றொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான ‘கிரிமினல்’ வழக்கு! நிலம் தொடர்பான வழக்கில் “சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றாலும், மசூதி இடிக்கப்பட்டது தவறு” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால், தற்போது இதுவும் இந்துத்துவா பிரிவினருக்கே சாதகமான தீர்ப்பாக அமைந்துள்ளது என்று நாட்டின் தலைவர்கள் மட்டுமல்லாது சாமானிய மக்கள் பலரும் சமூக வலைத் தளங்களில்  விமர்சித்து வருகின்றனர்.

https://twitter.com/FascismTalks/status/1311254246176813056?s=20

 

 

https://twitter.com/JeniOfficel/status/1311226257745432576?s=20

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x