கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20% அதிகரிப்பு!!!

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலன் கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை ஆனது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வுகள் நடைபெற்று வரக் கூடிய நிலையில் அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கக்கூடிய காரணத்தால் 20 சதவீத இடங்களை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

தற்போதைய நிலையில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்ககூடிய இடங்களுடைய எண்ணிக்கை என்பது 92 ஆயிரம் இடங்களாக இருக்கிறது.

எனவே இந்த 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கக்கூடிய காரணத்தால் வசதி இருக்கக்கூடிய கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் அறிவியல் கல்லூரிகளாக இருக்கக்கூடிய பட்சத்தில் அந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய ஆய்வக வசதிகள் உடைய அடிப்படையில் இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் சார்ந்திருக்கக் கூடிய பல்கலைக்கழகத்திலும் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக அரசும் அரசு கல்லூரிகளில் சேர கூடிய மாணவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் தனியார் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கையை அதிகரித்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க வேண்டுமென்றால் அதற்கான ஆய்வக வசதிகள், அங்கு இருக்கக்கூடிய வகுப்பறை வசதிகள் போன்றவற்றை காண்பித்தால் கூடுதல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீபகாலமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆண்டும் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியில் உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளில் சேர்க்க முடியாதவர்கள் இந்த வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x