இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வானது உலக உணவு திட்ட அமைப்பு!!
உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1901ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர்.
BREAKING NEWS:
The Norwegian Nobel Committee has decided to award the 2020 Nobel Peace Prize to the World Food Programme (WFP).#NobelPrize #NobelPeacePrize pic.twitter.com/fjnKfXjE3E— The Nobel Prize (@NobelPrize) October 9, 2020
கடந்த மூன்று நாட்களாக முறையே மருத்துவம், இயிற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 83 நாடுகளில் 9 கோடி பேருக்கு உணவு வழங்கிய ஐ.நா.சபையின் உலக உணவு திட்ட அமைப்புக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.