நாளுக்கு நாள் பலம் பெறும் கொரோனா… அதிர்ச்சி தகவல்

உலகின் 60 நாடுகளில் உருமாறிய பெருந்தொற்று வைரஸ் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் சிலரும் உருமாறிய பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய வைரஸால் 100க்கும் அதிகமாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.