சீ… பொம்பளையா இவள்… 24 ஆண்டுகள் சிறை வழங்கிய நீதிபதி…

டெல்லியின் மிகப்பெரிய விபச்சார நெட்வொர்க் ஆப்பரேட்டரான சோனு பஞ்சாபனுக்கு, டெல்லி நீதிமன்றம், 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சோனு பஞ்சாபனுக்கு தண்டனை விதித்த நீதிபதி, ​​”இவள் ஒரு பெண் என்று அழைக்கப்படுவதற்கான அனைத்து வரம்புகளையும் தாண்டி, கடுமையான தண்டனைக்கு தகுதியானவள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

சோனு பஞ்சாபன் யார், அவள் ஏன் ‘கடுமையான தண்டனைக்கு’ தகுதியானவள்?

சோனு பஞ்சாபன், இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் விபச்சார தொழிலுக்கான உயர்மட்ட புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளாள். டெல்லி தலைமை தளமாக கொண்டு இயங்கி வந்த அவள், பிரபல அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் 14வயதுக்குட்பட்ட சிறுமிகளை சப்ளை செய்து வந்துள்ளாள்.

பண்ணை வீடுகள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தான் சோனு, பணம் சம்பாதிக்கும் இடம். சோனு பஞ்சாபனை பல சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும், எந்த சிறுமிகளும் அவளுக்கு எதிராக புகார் அளிக்காததால், ஒவ்வொரு முறையும் தப்பித்துவந்தாள் விபச்சார தலைவி சோனு.

2007 ஆம் ஆண்டில் விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ், பஞ்சாபான் சிறையில் அடைக்கப்பட்டாள் சோனு. அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்த போதிலும், 2008 ஆம் ஆண்டில் இதே தவறுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டாள்.

2011 ஆம் ஆண்டில், டெல்லி காவல்துறையினர் சோனுவை விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி மீண்டும் கைது செய்தனர். அவள் சில காலம் சிறை தண்டனை அனுபவித்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிமன்றம் அவளை விடுவித்தது.

கடைசியாக, 2014 ஆம் ஆண்டில் அவள் வாழ்க்கையில் டிவிஸ்ட் ஏற்பட்டது. அவள் கஸ்டடியில் இருந்து தப்பித்த ஒரு 13 வயது சிறுமி, நஜாப்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “சந்தீப் பெட்வால் ஆசாராம் என்ற நபரால், நான் 2013 ஆம் ஆண்டில் கடத்தப்பட்டேன். அப்போது எனக்கு 12 வயது. அப்போதிருந்து நான் 12 க்கும் மேற்பட்ட ஆண்களுடன் கட்டாய உடலுறவு கொள் நிர்பந்திக்கப்பட்டேன்.” என்று போலீசாரிடம் சிறுமி கூறினாள்.

ஆனால், அந்த வழக்கும் நீதிமன்றத்தை அடைவதற்குள் மடைமாற்றப்பட்டது. பின்னர், பல கண்டனங்களுக்கு பிறகு, இந்த விவகாரம் டெல்லி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

குற்றப்பிரிவு இறுதியாக 2017 இல் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் கண்டுபிடித்து, சோனு மற்றும் சந்தீப் பெட்வாலைக் கைது செய்தது. சோனு மீதான குற்றச்சாட்டுகளை டெல்லி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அவளுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில், “சோனு, ஒரு பெண் என்று அழைக்கப்படுவதற்கான அனைத்து வரம்புகளையும் தாண்டி, கடுமையான தண்டனைக்கு தகுதியானவள். கஸ்டமர்களிடம் முரண்டுபிடிக்கும் சிறுமிகளின் பிறப்புறுப்பில், மிளகாய் பொடி தடவி கொடுமைப்படுத்தியுள்ளாள். இந்த கொடூர குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. சிறுமிக்கு ரூ .7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி நீதிமன்றம் அவளை குற்றவாளி என்று தீர்ப்பளித்ததை அடுத்து, திகார் சிறைக்குள் சோனு தற்கொலை செய்துகொள்ள முயன்றாள். அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x