வியன்னாவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மசூதிகளை மூட உத்தரவிட்ட ஆஸ்திரிய அரசு!!
![](https://thambattam.com/storage/2020/11/GettyImages-1229491001-scaled-1-e1604748238508-780x470.jpg)
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து வியன்னாவில் உள்ள மசூதிகளை தற்காலிகமாக மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி 6 வெவ்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியது.
![](https://thambattam.com/storage/2020/11/Vienna-attack-government-orders-the-closure-of-radical-mosques-e1604748220979-300x198.jpg)
இந்நிலையில் ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் வியன்னாவில் உள்ள தெஹிட் மசூதி மற்றும் மெலிட் இப்ராஹிம் இஸ்லாமிய சங்கத்தையும் மூடுவதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
தேசியப் பாதுகாப்பு காரணமாகவே மசூதி மூடப்படுவதாகவும், அரசின் இந்த நடவடிக்கையை இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக கருதத் தேவையில்லை எனவும் கார்ல் தெரிவித்தார். மேலும், வியன்னா தாக்குதல் சம்பவத்தையொட்டி வியன்னா உளவு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் அறிவித்தார்.