நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்காகவும் பணியாற்றிட வேண்டும்:ஸ்டாலின் வாழ்த்து

மத்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகத்தில் இருந்து 44 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு பல்வேறு கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு. க. தலைவர் ஸ்டாலின் வெற்றபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்:

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிப்பெற்றுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தமிழகத்தில் முதலிடத்தையும், தேசிய அளவில் 7-வது இடத்தையும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மருங்கூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் தேசிய அளவில் 47-வது இடத்தையும் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றியடைந்து – நிர்வாகத்தில் பொதுப்பணியாற்ற வந்திருப்பது பெருமகிழ்ச்சிக்குரியது.மேலும், மதுரையைச் சேர்ந்த பூர்ணசுந்தரி, சென்னையைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய மாற்றுத் திறனாளிகள், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் செய்தி, எனது இதயத்தை நிரப்பி ஈடில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.

வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பினை, நாட்டின் முன்னேற்றத்திற்கும்,  நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், குறிப்பாக, பிறந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திப் பணியாற்றிட எனது நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்த முறை வெற்றி வாய்ப்பு கிடைக்காதவர்கள், அதற்காகச் சிறிதும் சோர்ந்து விடாமல் – இந்தப் பொன்னான வாய்ப்பு நமக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடனும், உறுதியுடனும், தொடர்ந்து முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x