இன்று முதல் எம்.பி.ஏ/எம்.ஸி.ஏ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டில் எம்பிஏ, எம்சிஏ மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். 2020 – 2021 கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறுவது வழக்கம்.

தற்போது கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு இன்று முதல் (ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்குகிறது.

டான்செட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x