திருப்பதி கோயில் காவலர்கள் 30 பேருக்கு கொரோனா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 17 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது காவலர்கள் 30 பேர் உட்பட 44 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில் கடந்த ஜூன் 8ம் தேதி முதல் திறக்கப்பட்டது. பக்தர்கள் அனுமதி தொடங்கப்பட்டு 25 நாட்கள் முடிந்துள்ளது. இந்நிலையில் திருமலையில் பணிபுரியும் மேளவாத்தியக்காரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், அர்ச்சகர்கள் என 17 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியது. தற்போது காவலர்கள் 30 பேர் உட்பட 44 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை தினசரி 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது திருப்பதி தேவஸ்தானத்தில் அர்ச்சகர், பணியாற்றும் ஊழியர்கள், காவலர்கள் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், பக்தர்களின் எண்ணிக்கையை தற்போதும் உயர்த்தும் எண்ணம் தேவஸ்தானத்திற்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x