மாற்றுதிறனாளி மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலை செய்துகொண்ட தந்தை!

ஆம்லெட்டில் விஷம் கலந்து கொடுத்து மாற்றுத்திறனாளி மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் செல்லைய்யா மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்த 70 வயதான செல்லைய்யா அன்றாட வாழ்வாதாரத்துக்கே கஷ்டபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் 40 வயதான மகள் சாந்திக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என செல்லைய்யா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் மகள் சாந்திக்கு ஆம்லெட்டில் விஷம் வைத்து கொடுத்துள்ளார் இதை உண்ட சாந்தி உயிரிழந்துள்ளார்.

மகளை கொன்ற தந்தை செல்லைய்யாவும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை, மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x