மழைநீரில் வந்த மஞ்சள் தவளைகள்… பின்னணி என்ன?

மழைநீரில் வந்த மஞ்சள் தவளைகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்தியபிரதேசம் மாநிலம் நரசிங்கபூர் என்னும் பகுதியில் பெய்த மழையில் ஏரளாமான மஞ்சள் தவளைகள் காணப்பட்டன. உடனே இதை பார்த்து ஆச்சரியமடைந்த மக்கள் உயிரியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து கூறிய ஆய்வாளர்கள், மஞ்சள் நிறத்தில் உள்ள தவளைகள் Indian Bullfrog வகையை சேர்ந்தது என்றனர். ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் மழை பெய்யும் நேரத்தில் இனப்பெருக்கத்திற்காக தனது நிறத்தை மாற்றுவதாக தெரிவித்தனர்.
இந்த மாதங்களில் தவளைகள் இனச்சேர்க்கை நடைபெறும் என்பதால், பெண் தவளைகள் பச்சை நிறமாகவும், ஆண் தவளை மஞ்சள் நிறமாக மாறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவுவதை குறிக்கத்தான் மஞ்சள் தவளைகள் என்று சிலரும், வெட்டுக்கிளி அழிவின் அறிகுறிதான் மஞ்சள் தவளைகள் என்று மற்ற சிலரும் பதிவிட்டனர். ஆனால், இது இயற்கையானது என்று சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.