மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க அதிமுக தீர்மானம்

மதுரையை தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக உருவாக்க வேண்டும் என அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக மக்களில் தோராயமாக 8-ல் ஒருவர் தலைநகரான சென்னையில் உள்ளனர். வேலை, தொழில், கல்வி, அரசியல், அரசு பணிகளுக்காக சென்னையை நம்பியே உள்ளதால் ஜன நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதன் மூலம் மாநிலம் புதிய உத்வேகத்துடன் வளர்ச்சி பெறும் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர்.

எதிர்கால நலன் கருதி, மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் தென் மாவட்டங்கள் சிறப்பான வளர்ச்சியடையும் என கருதுகின்றனர். இதே கருத்தை வலியுறுத்தி ஆளும் கட்சியான அதிமுக சார்பில் மதுரையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மா.செவாக உள்ள அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில்  இத்தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். இது முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என கூறினார். ஏற்கனவே அதிமுக அரசு நிர்வாக வசதிகளுக்காக காஞ்சிபுரம், நெல்லை, விழுப்புரம், நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டங்களை பிரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x