பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டுமான தேதி அறிவிப்பு!

அயோத்தியில் நடந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில், ராமர் கோயில் கட்டுமான பணியை, வருகிற 5ம் தேதி தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தில், ராமர் கோவிலை கட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ராமநவமி அன்று பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்காக மார்ச் மாதம் மிகப்பெரிய யாத்திரை நடத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டிருந்தார். அதற்குள்ளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படவே கட்டுமானப் பணிகள் தொடங்குவது தடைபட்டது. அதன்பிறகு ஜூன் மாதம் கட்டுமானப் பணி தொடங்க திட்டமிட்ட போது சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. போர் மூளும் ஆபத்து இருந்ததால் கட்டுமானப் பணி தடைப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கட்டுமானப் பணியை எப்போது தொடங்கலாம் என்று முடிவு செய்ய ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x