இந்திய தடுப்பூசி நிறுவனத்துடன், பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.3400 கோடிக்கு புது ஒப்பந்தம்

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து, சந்தைப்படுத்துவது தொடர்பாக, பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த, சீரம் நிறுவனம், உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள, ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை, ‘ஆஸ்ட்ரா ஜெனகா’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. தற்போது, இரண்டாம் கட்டமாக, மனிதர்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தி பரிசோதித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்குவது தொடர்பாக, சீரம் நிறுவனம், ‘பில் அண்டு மெலிந்தா கேட்ஸ்’ அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், சீரம், 10 கோடி, ‘டோஸ்’ கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை உள்நாட்டிலும், வளரும் நாடுகளுக்கும் வழங்க வழி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பிற்காக, சீரம், 3400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், நிமிடத்திற்கு, 500 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் வசதி உள்ளது.
ஒரு ‘டோஸ்’ ரூ.225
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தின் விலையை அறிவித்துள்ளது. ‘கொரோனா தடுப்பூசி மருந்து, ஒரு டோஸ், 225 ரூபாய் என்ற விலையில், 92 நாடுகளில் விற்பனைக்கு வரும்’ என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது