தைவான் தேசிய தின கொண்டாட்டங்கள் பற்றி விளம்பரம் செய்த இந்திய செய்தி நிறுவனங்களை கண்டித்த சீனா!!

இந்திய செய்தித்தாள்களில் தைவான் தேசிய நாள் கொண்டாட்டங்கள் தொடர்பாக வெளியான விளம்பரங்களுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தைவான் அதிபராக ட்சாய் ல்ங் 2016ம் ஆண்டு பதவியேற்ற பின், தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என உரிமை கொண்டாடிய சீனா, அந்நாட்டிற்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது. தைவானுக்கு, அமெரிக்கா ராணுவ உதவிகளை மேற்கொண்டு சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. லடாக் மோதலுக்கு பின், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் களமிறங்கியுள்ளது.

சீனாவில் இருந்து ஜப்பானின் கட்டுப்பாட்டில் சென்ற தைவான் 1949 டிசம்பர் 10-ம் தேதி தனி நாடாக உருவானது. இந்த நாளை தேசிய நாளாக தைவான் கொண்டி வருகிறது. இந்த ஆண்டுக்கான தைவானின் தேசிய நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாடங்கள் மற்றும் தைவானின் விடுதலை தொடர்பான தகவகல்கள் அடங்கிய விளம்பரங்கள் இந்திய செய்தித்தாள்களிலும், செய்தி ஊடங்களிலும் வெளியிடப்பட்டன.
தற்போது இந்திய செய்தித்தாள்களில் தைவான் தேசியநாள் கொண்டாட்டங்கள் தொடர்பாக வெளியான விளம்பரங்களுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “உலகத்தில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. தைவான் ஒரு தனிநாடாகவோ அல்லது சீன குடியரசாகவோ அல்லது சீனாவின் தைவான் மாகாணத்தில் உள்ள தலைவர்களை அதிபர்களாகவோ மேற்கோள் காட்டக்கூடாது. இது பொதுமக்களுக்கு தவறான கருத்து மற்றும் செய்தியை கொண்டு சேர்க்கும்” என கூறியுள்ளது.
So many friends from #India🇮🇳 are ready to join in celebrating #TaiwanNationalDay🇹🇼. Our hearts are touched in #Taiwan by this wonderful support. Thank you! When I say I like India, I really mean it. "Get Lost" Minister JW pic.twitter.com/4UbKyz6qXK
— 外交部 Ministry of Foreign Affairs, ROC (Taiwan) 🇹🇼 (@MOFA_Taiwan) October 9, 2020
இந்த அறிக்கை, தைவான் தேசியநாள் கொண்டாட்ட விளம்பரங்கள் வெளியிட்ட இந்தியாவின் பிரபல செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும் இ-மெயில் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தைவான் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் வு தனது ட்விட்டர் பக்கத்தில், “சுதந்திரத்தை விரும்பும் மக்களையும், துடிப்பான ஊடகத்துறையையும் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆனால் கம்யூனிஸ்ட் சீனா தணிக்கை விதித்து இந்திய துணைக் கண்டத்திற்குள் அணிவகுத்துச் செல்ல விரும்புகிறது. இதற்கு தைவானின் இந்திய நண்பர்கள் ஒரு பதில் வைத்துள்ளனர். தொலைந்து போ சீனா!” என தெரிவித்துள்ளார்.