அடித்து துன்புறுத்து மனைவியால், தினமும் அழுது புலம்பும் கணவன்!!

தாலி கட்டிய கணவனை பெண் ஒருவர் குடித்துவிட்டு தினமும்  அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் மணிநகரைச் சேந்த 29 வயது பெண்ணும், அவரது கணவரும் கடந்த 2018ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். மனைவிக்கு குடிப்பழக்கம் இருந்தது திருமணத்திற்கு பிறகு தான் அவருக்கு தெரிந்தது.

இந்நிலையில் குடிபோதையில் கணவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தினமும் சித்திரவதை செய்து வந்தார் அப்பெண். துன்புறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இது போதாது என்று தனது மாமனார், மாமியாரையும் சித்திரவதை செய்து வந்துள்ளார்.

பின்னர் கணவனின் அலுவலகத்திற்கு சென்று அங்கும் போதையில், ரகளையில் ஈடுபட்டுள்ளார். இவ்வளவும் செய்துவிட்டு தன்னை கணவரும், மாமியால், மாமனாரும் கொடுமை செய்கின்றனர் என போலீசிலும் , மகளிர் அமைப்புகளிலும் அந்த பெண் புகார் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவரது கணவர் “தனக்கும், தனது பெற்றோருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். தங்களுக்கு ஏதாவது நேரிட்டால் அதற்கு தன் மனைவியே காரணம்” என கூறியுள்ளார். அவரது இந்த சோக கதையைக் கேட்ட காவல்துறையினர் அவரது மனைவி மீது விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x