அமெரிக்காவில் 11000 ஏக்கர் அளவில் கட்டுங்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ!
![](https://thambattam.com/storage/2020/08/960x0-780x470.jpg)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ 5,000 மடங்கு அதிகரித்துள்ளதால், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அங்கிருந்து 40000 மக்களை வெளிஎற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/08/5664361_fire-trees-300x169.jpg)
அமெரிக்காவின் வடக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள தேசிய வனப்பகுதியில் கடந்த புதன் கிழமை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் 2 மணிநேரத்தில் 10,500 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயால் முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
![](https://thambattam.com/storage/2020/08/5be615e8d217300008df9813-eight-300x200.jpg)
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த 1,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காற்று வீச்சு இல்லாமலே ஆயிரம் மடங்காக இருந்த காட்டுத்தீ தற்போது 5 ஆயிரம் கடங்காக அதிகரித்து வேகமாக பரவி வருவதாகவும், இதனால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.