கணவன் உயிரிழந்ததை தாங்க முடியாத மனைவி.. தனது மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை..

மேற்கு வங்க மாநிலம் ராஜபூரில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக உலுபீரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் உயிரிழந்த அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் பேரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வால் மனமுடைந்த அந்த நபரின் மனைவி இறுதிச் சடங்கு முடிவடைந்ததும் தனது மகனுடம் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் தனது மகனுடன் சென்று பூட்டிக்கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெண்ணின் தந்தை வீட்டை கதவை தட்டியுள்ளனர். எந்த ஒரு பதிலும் கிடைக்காததை தொடர்ந்து ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தனது தற்கொலைக்கு முன்னர் மாற்றுத்திறனாளியாக உள்ள தனது மகனையும் கொலை செய்தது உறுதியானது.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x