சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: கோவில்பட்டி காவல் நிலையத்தில் சி.பி.ஐ., விசாரணை

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், கோவில்பட்டி காவல் நிலையத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.


இது தொடர்பாக கொலை வழக்‍குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவத்தில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அது குறித்த ஆவணங்களைப் பார்வையிட்டு, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசனிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இவ்வழக்‍கில், மாவட்ட குடும்பநலத் துறை துணை இயக்‍குனர்  பொன் இசக்‍கி மற்றும் அலுவலக மேலாளர் முத்துவிநாயகம் ஆகியோரும், சி.பி.ஐ., விசாரணைக்‍கு ஆஜராகினர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x