N-95 மாஸ்க் கொரோனா வைரஸைத் தடுக்காது – சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

முகக் கவசங்களைப் பொறுத்தவரை பல்வேறு டிசைன்கள் மற்றும் வடிவங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில் N-95 முகக்கவசங்கள் அதிக திறன் வாய்ந்தவை என்று பலரும் வாங்கி அணிந்து கொள்கின்றனர்.

இதன்மூலம் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் துளையிடப்பட்ட சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட N-95 முகக்கவசங்களால் எந்தப் பயனும் இல்லை என்று அதிர்ச்சியூட்டும் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களை தவிர்த்து ஏராளமான பொதுமக்கள் துளையிடப்பட்ட சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட N-95 முகக்கவசங்கள் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.

இதன்மூலம் வைரஸை பரவுவதைத் தடுக்க முடியாது. எனவே துளையிடப்பட்ட சுவாசக் கருவிகள் பொருந்திய N-95 முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாம். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தின் மூலம் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x