சமஸ்கிருதம் நன்கு வளரட்டும்….. மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி

புதுடில்லி: உலக சமஸ்கிருத நாளை முன்னிட்டு, ‘அழகிய மொழியைப் படிக்கும் அனைவரையும் நான் வணங்குகிறேன்’ என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஷ்ரவணபூர்ணிமா எனப்படும் ஷ்ரவண மாத பவுர்ணமி தினத்தில், உலக சமஸ்கிருத நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, டுவிட்டரில் பதிவிட்டதாவது: உலக சமஸ்கிருத தினத்தில், அழகிய மொழியை படிக்கும், ஊக்குவிக்கும் அனைவரையும் நான் வணங்குகிறேன். வருங்காலத்தில், சமஸ்கிருதம் நல்வளத்துடன் வளர வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ‘இந்தியாவை இணைக்கும் இணைப்பு சமஸ்கிருதம்’ என புகழாரம் சூட்டியுள்ளார்.