ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பெரும் தீ விபத்து! அதிகாரிகள் விரைவு!!
![](https://thambattam.com/storage/2020/08/Ef6fmR9U8AEIqvR.jpg)
தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் எல்லையில் உள்ள ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலத்தின் அணையின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நிலத்தடி நீர்மின் நிலையத்தின் நான்காவது அலகு முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் நீர்மின் நிலையத்தில் இருந்த 8 ஊழியர்கள் சிக்கிக் கொண்டதாகவும் அவர்களை மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் 9 பேர் உள்ளே சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக இருப்பதாகவும் தெரிகிறது
![](https://thambattam.com/storage/2020/08/adsfasd-300x209.jpg)
இந்த ஸ்ரீ சைலம் அணை ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளிப்படும் புகை அதிகமாக இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் மீட்புப்பணி வீரர்கள் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
மின் நிலையத்தின் யூனிட் 4 இல் தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக பேனல் போர்டுகள் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த இடம் புகையால் சூழ்ந்துள்ளது என கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் 17 பேரில், 8 பேர் சுரங்கப்பாதை வழியாக பாதுகாப்பாக தப்பினர். மீதமுள்ள ஒன்பது பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.